மொழி பேசும் கவிதைகள்,
வரலாறு கூறும் கட்டுரைகள்,
சிந்திக்கச் செய்யும் பேச்சுகள்,
சிரிக்க வைக்கும் பட்டிமன்றங்கள், நிகழ்வுகள்,
களிப்புகளை வெளிக்கொணர நடனங்கள்,
கண்ணைக் கவரும் வண்ணங்கள், ஓவியங்கள்!
இதுபோன்ற கலைகள் இல்லையேல்,
கலைவிழாவிற்கு ஏது அழகு!
கலைகளைச் சிறப்பிக்கத் தொடுக்கப்படும் விழா... கலைவிழா!
வருடம் முழுமையும் கொண்ட சலனங்களை,
ஓர் நொடியில் மறைந்து போக வைக்கும் ஓர்நாள்... கலைவிழா!
- தினேஷ் சுப்பிரமணியன்,
இயந்திரவியல் துறை,
நான்காம் ஆண்டு.
No comments:
Post a Comment