தித்திக்கும் தீந்தமிழே !!!! நீ திக்கெட்டும் நிலைபெறுக !!!
கலையெனும் கடலினைச் சிறப்பிக்கும் தமிழெனும் அமுதினைப் பருகி மகிழ வாரீர் 'சாரல்' தமிழ் மன்றத்தினை நாடி..
சாரல் தமிழ் மன்றத்தின் போட்டிகளும் நிகழ்ச்சிகளும் இவையாவன :
பேச்சுப் போட்டி :
சொல்லின் செல்வர்களின் மேடை இது. செவிச் சுவை அளிக்க வாருங்கள்.
கட்டுரைப் போட்டி :
’எமக்குத் தொழில் எழுத்து’ என்போருக்காக. தாய்மொழியாம் தமிழ்மொழியில் புதுமொழி படைக்க வாருங்கள்.
கவிதைப் போட்டி :
சொற்சுவையில், பொருட்சுவையில், சிந்தனைத் தெளியலில் யாப்பமைக்கும் சிற்பியா நீங்கள்? நவீன தமிழுக்கு நளினம் சேர்க்கும் நாயகரா நீங்கள்? இது உங்களுக்கான தளம். அழகுத் தமிழை அள்ளித் தந்திட வாருங்கள்.
தமிழ்க் களஞ்சியம் :
உலக நடப்புகள் அனைத்தும் உங்கள் விரல் நுனிகளிலா? சகலகலா வல்லவர்களே, இது உங்களுக்கான ஆடுகளம்.
சிறுகதைப் போட்டி :
கற்பனைகளால் அலங்கரித்து, சிறுகதைகளைச் செதுக்க வாருங்கள் !
பட்டிமன்றம் :
தங்களுக்கென்ற மேடை..பேச்சுத்திறனால் மனங்களையும் பரிசுகளையும் வெல்வீராக..
தாய்மொழியாம் தமிழ்மொழியை வளர்ப்போம், சாரல் தமிழ் மன்றத்துடன் ...
No comments:
Post a Comment